
ஆமிர்கான் இயக்கத்தில், சிறுவன் தர்ஷீல் சபாரியின் அபார நடிப்பில் உருவாகி இந்தியாவையே நெகிழ வைத்த படம் தாரே ஜமீன் பர்.
இப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் தற்போது இறுதிச் சுற்றுக்கான பட்டியலிலிருந்து தாரே ஜமீன் பர் நீக்கப்பட்டு விட்டது. இதனால் ஆஸ்கர் வாய்ப்பு பறி போய் விட்டது.
சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் மொத்தம் 9 படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தாரே ஜமீன் பர் இடம் பெறவில்லை.
இஸ்ரேலிய டாக்குமென்டரிப் படமான வாட்ஸ் வித் பஷீர், ஜெர்மனியின் பதர் மெய்ன்ஹாப் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளிநாட்டுப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 22ம் தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆமிர்கானின் லகான் ஆஸ்கர் வெளிநாட்டுப் படப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறி புதிய சாதனை படைத்திருந்தது என்பது நினைவிருக்கலாம். அந்த சாதனையை மீண்டும் ஆமிரின் தாரே ஜமீன் பர் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
Source: Oneindia
0 comments:
Post a Comment