மதுரை: பல கோடி ரூபாயை செலவழித்து திருமங்கலத்தில் ஆளுங்கட்சி வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளதாக திருமங்கலத்தில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக ரீதியாக மக்களைச் சந்தித்தோம். அதனால் எங்களுக்கு தோல்வியல்ல. இது திமுகவிற்கு நிரந்தர வெற்றியல்ல.
அரசு எந்திரம் ,அதிகார பலம், பலகோடி ரூபாயை செலவழித்து வெற்றியை வாங்கியுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அராஜகத்தை மீறியும், அச்சுறுத்தலை மீறியும் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
வென்றது அடியாள்-பணம்- அதிகார பலம்: சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் துவங்கிய நாளிலிருந்து வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை ஆளுங்கட்சி, பண பலத்தை, அதிகார பலத்தை, அடியாட்கள் பலத்தை பயன் படுத்தியுள்ளது.
இத்தகைய விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தினோம். ஆனால் பயனில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஆகிய இருவருமே ஆளுங்கட்சியின் அராஜ கத்தையும், அத்துமீறல்களையும் சுட்டிக்காட்டி னார்கள். இப்பின்னணியில்தான் வாக்குப்பதிவு நடை பெற்றது.
இத்தகைய சூழலிலும், அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்த, வாக்கு சேகரித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
Source: Oneindia
Best Tamil films
Monday, January 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment